இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையோடு செய்தால் உங்கள் வீட்டில் வருமானம் இரட்டிப்பாகுமாம்!
பல வீடுகளில் பணவரவு இருந்தாலும் ஏதாவது ஒரு விதத்தில் செலவாகி கரைந்து விடுகிறது. என அதிகமானவர்கள் கவலை அடைந்துள்ளார்கள். வருமானம் இருந்தாலும் ஒரு வீட்டில் சேமிப்பு என்ற எண்ணம் இருந்தால் தான் பணத்தை சேமிக்க முடியும். நாம் எப்படி வீட்டில் தொடர்ந்து வருமானத்தை ஈட்டலாம் என்பதற்கான வழிமுறை என்ன என்பதை பார்ப்போம்.
வெள்ளி மோதிரம்
கண்ணாடி பவுல்
வெற்றிலை- 1
பச்சை கற்பூரம்- 1 துண்டு
வெள்ளி மோதிரம் யாருடையதாக இருக்க வேண்டும் என்றால் வீட்டில் சம்பளம் வாங்குபவரின் மோதிரமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் வீட்டில் வருமானத்திற்கு குறைவு இல்லாமல் வந்து கொண்டே இருக்கும்.
கண்ணாடி பவுலில் வெள்ளி மோதிரம் மற்றும் ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை போட்டு அதை மூடும் படி வெற்றிலையை காம்பு நீக்கி வெற்றிலையின் முன் பக்கம் மோதிரம் மற்றும் பச்சை கற்பூரத்தை பார்த்த படி வைக்க வேண்டும். வெற்றிலை காம்பு நீக்கிய பக்கம் சுவாமிக்கு வலது புறமாக இருக்கும் படி வைக்க வேண்டும். மறுநாள் வெள்ளிக்கிழமை காலையில் குளித்து முடித்து விட்டு மோதிரத்தை இடது கையின் ஆள்காட்டி விரலில் போட்டுக்கொள்ளவேண்டும்.
இது போன்று தொடர்ந்து செய்து வந்தால் பணம் ஏதாவது ஒரு வகையில் நிலுவையில் இருக்கும். இந்த வழிமுறையை வியாழக்கிழமை இரவு சாப்பிடுவதற்கு முன் செய்ய வேண்டும். எந்த ஒரு பரிகாரத்தை செய்யும் போதும் அதை முழு நம்பிக்கையோடு செய்தால் அதற்குண்டான பலன் நிச்சயம் கிடைக்கும்.