எங்கே சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர்..?? கூகுளில் தேடிய பாகிஸ்தானியர்கள்…!!!
கடந்த 07 ஆம் திகதி சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் நிலை நிறுத்துவதற்காக இஸ்ரோ மேற்கொண்ட கடும் முயற்சி குறித்த விவரங்களை இந்தியர்களை போலவே பாகிஸ்தானிலும் லட்சக்கணக்கானோர் கூகுளில் ஆர்வத்துடன் அதிகம் தேடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ அனுப்பி வைத்த சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சென்ற கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்துள்ளது. இதனால் மிகுந்த ஏமாற்றமும், கவலையும் அடைந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய நிகழ்வு தொடர்பாக இந்தியா மக்களைப் போல பாகிஸ்தான் மக்களும் கூகுளில் அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கடந்த 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் கூகுளில் சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் உள்ளிட்ட வார்த்தைகள் அதிகம் தேடப்பட்டதாக கூகுள் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியர்களைப் போன்று பாகிஸ்தானியர்களும் இந்த கீ வேர்ட்ஸ்களை உபயோகித்து கூகுளில் அதிகம் தேடியுள்ளனர். கூகுள் வெளியிட்ட தகவல் அறிக்கையில், விக்ரம் லேண்டரை பற்றி அறிந்து கொள்வதில் இந்தியர்களை விட பாகிஸ்தானியர்களே அதிகம் ஆர்வம் காட்டியதாக தெரிவித்துள்ளது.
அந்த நாட்களில் சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தொடர்பு துண்டித்தது அனைவர் மத்தியிலும் பெரும் கவலையையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்திய நிலையில் #IndiaFails என்ற ஹேஸ்டேக்கை பாகிஸ்தானியர்கள் ட்ரெண்ட் செய்துள்ளனர். பாகிஸ்தானியரின் இந்த செயலுக்கு பதிலடி கொடுத்த இந்தியர்கள் #WorthlessPakistan என்ற ஹேஸ்டேக்கை உலக அளவில் ட்ரெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது