எல் சால்வடாரை புரட்டி எடுத்த அமண்டா புயலால் 7 பேர் பரிதாபமாக பலி!
மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் அமண்டா புயல் வீசியுள்ளது. இந்த புயல் காரணமாக 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அடுத்த சில நாட்களுக்கு மத்திய அமெரிக்கா மற்றும் தெற்கு மெக்ஸிகோவின் சில பகுதிகளில் அமண்டா புயல் வீசியுள்ள நிலையில் பலத்த மழை செய்துள்ளது என்றும், மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் அமெரிக்க தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான எல் சால்வடாரில், கடும் மழை பெய்துள்ளதால் ஆறுகளிலும் சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கட்டிடங்கள் பல இடிந்து விழுந்தன. அதில் 8 வயதுடைய சிறுவன் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
Videos & Video Copyrights Owned By : Polimer News