பஸ்ஸை கடத்திச் சென்று கொழுத்திய மர்ம மனிதன்
முகமூடி அணிந்த மர்ம மனிதன் ஒருவன் பஸ்ஸைக் கடத்திச் சென்று கொழுத்தியுள்ள சம்பவமானது அயர்லாந்தின் வட பகுதியில் இடம்பெற்றுள்ளது. அயர்லாந்தின் பெல்பாஸ்ட் என்னும் பகுதியிலேயே இந்தச் சம்பவமானது நிகழ்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுதம் தரித்து வந்த முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவரே துப்பாக்கி முனையில் இந்த பஸ்ஸைக் கடத்தியுள்ளதுடன் அவர் ஏற்கனவே கார் ஒன்றையும் வீதிக்கு குறுக்காக எரித்துள்ளார்.
அயர்லாந்தில் கொண்டாடப்படும் லெவன்த் நைட் விழாக் கொண்டாட்டத்தைத் தடுக்கும் முகமாகவே இந்தச் செயல்கள் இடம்பெற்றுள்ளன என்றும் தெய்வாதீனமாக எவருக்கும் உயிர்ச்சேதம் நிகழவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்த மறுநிமிடமே தீயணைப்புப் படைக்கு தகவல் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து தீ வைக்கப்பட்ட பஸ்இ கார்கள் ஆகியவற்றை அணைக்க தீயணைப்பப் படையினர் போராடியுள்ளனர்.
இன்றைய வீடியோக்கள்!!