பீகாரில் மர்ம நோயல் செத்து மடியும் குழந்தை..!! இன்னும் கண்டு பிடிக்கப்படாத நோய்..!!
பீகாரில் மர்ம நோயால் தாக்கப்பட்டு தொடர்ந்து குழந்தை உயிரிழந்து வருகின்றனர். மேலும் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் மூளைக்காய்ச்சல் தாக்கியதில் ஏறத்தாழ 100 குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர்.
மேலும் இந்த நோயில் இருந்து அம்மாநில நிர்வாகம் மீண்டு வருவதற்குள் கயாவில் உள்ள அனுராக் நாராயண் மகத் மருத்துவக் கல்லூரி வைத்தியசாலையில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டிருந்த 22 குழந்தைகள் சேர்க்கப்பட்டன. மேலும் இந்த நோயால் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 6 குழந்தைகள் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து பாட்னாவில் இருந்து சிறப்பு மருத்துவக் குழுவினர் கயாவிற்கு வந்துள்ளனர்.
மேலும் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையை மேலும் தீவிரப்படுத்த பீகார் அரசு உத்தரவு விட்டனர்.