கொழும்பில் கூடிய இரட்டையர்கள்; உலக சாதனையையும் படைத்துள்ளனர்!
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இரட்டையர் ஒன்று கூடல் உலகளவில் சாதனை படைத்துள்ளது
இன்று காலை நடைபெற்ற இந்த ஒன்று கூடலில், ஐயாயிரம் ஜோடிகள் எதிர்பார்க்கப்பட்டன.
ஆனால், 14 ஆயிரம் ஜோடிகள் பங்கேற்று மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளது.
இதற்கு முன்னர், 1999ஆம் ஆண்டு தாய்வானில் நடந்த ஒன்றுகூடலில் 4 ஆயிரத்து 3 ஜோடிகள் பங்கேற்றதே சாதனையாக இருந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.