தமிழகத்தின் கோவையை சேர்ந்த விக்ரம்-பவித்ரா தம்பதியினருக்கு நேற்று குழந்தை பிறந்துள்ளது. எனினும் பின்னர் குழந்தை இறந்ததாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறவினர்கள் இறந்த குழந்தையின் உடலைப் பொறுப்பேற்று வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து அவர்கள் குழந்தையின் உடலை அட்கம் செய்வதற்காக எடுத்துச் சென்ற வேளையில் குழந்தையின் தலைப் பகுதியில் பெரிய காயம் ஒன்று இருப்பதை அவதானித்துள்ளனர். அதனால் குழந்தையை அடக்கம் செய்யாது மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று விசாரித்துள்ளனர்.
அப்போதே குழந்தை பிறந்ததும் கைகளில் எடுத்துச் சென்ற செவிலியரின் கைகளிலிருந்து குழந்தை தவறி வீழ்ந்ததும் அதனால் குழந்தை இறந்து போனதும் தெரியவந்துள்ளது. இதையறிந்து குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
கோவையில் உள்ள ராமகிருஷ்ணா தனியார் மருத்துவமனையில் குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தற்போது பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”