9 மாத குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய்.! துடிதுடித்து கதறிய போதும் கண்டுகொள்ளாமல் செய்த செயல்..வைரலாகும் வீடியோ இதோ.!!
நேற்றைய தினம் பெண் ஒருவரின் செயலால் யாழ்ப்பாணமே அதிர்ந்து போனது. தாய்மை என்பது உலகில் மிகவும் உன்னதமானது என்ற வார்த்தையை யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த பெண்ணும் பொய்யாக்கி உள்ளார். தற்போது பெற்ற தாயே குழந்தையை விற்பது, கொலை செய்வது, துன்புறுத்துவது என அதிக விடயங்கள் இடபெற்று வரும் நிலையில் பெற்ற குழந்தையை துடிக்க துடிக்க தாய் ஒருவர் அடித்து துன்புறுத்தி இருப்பது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருகோணமலையை சொந்த இடமாக கொண்ட குறித்த பெண் இஸ்லாமிய இளைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவரும் வெளி நாட்டில் பணி புரிந்து வந்த நிலையில் குழந்தையும் தாயும் மட்டும் இலங்கை வந்து பெண்ணின் பெற்றோருடன் இருந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக வெளி நாட்டில் உள்ள கணவரால் பணம் அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது, இதனால் கடுப்பான குறித்த பெண் கணவன் அதிக அன்பு வைத்திருக்கும் தனது குழந்தையை அடித்து துன்புறுத்தி வீடியோ எடுத்து கணவருக்கு அனுப்பியுள்ளார். கணவர் அப்படி செய்ய வேண்டாம் என கூறியும் கேட்கும் நிலையில் குறித்த பெண் இருக்கவில்லை.
குடும்பத்தினர் சொல்வதை கேட்காமல் குழந்தையை அடித்து துன்புறுத்துவதால் குறித்த பெண்ணின் தம்பி இதனை வீடியோ எடுத்து மீடியாக்களுக்கு கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பொலீஸ் விசாரணைக்கு வந்த நிலையில் பொலீஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர். குழந்தை தாயாரிடம் இருந்து மீட்கப் பட்டு வைத்தியசாலையில் சிறுவர் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவமானது யாழ் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.!!