ஒரு கிட்னியின் விலை 3 கோடியா ஈரோட்டில் நடந்த அதிர்ச்சி
ஒரு படத்தில் வடிவேலுவை வம்பிற்கு இழுத்து வண்டியில் ஏற்றி கிட்னி திருடுவான் ஒரு சிறுவன். அது போல் ஈரோட்டில் பிரபலமான மருத்துவமனை பெயரை சொல்லி முகநூல் மூலம் ஒரு கணக்கை தொடங்கி அதில் ஒரு கிட்னிக்கு 3 கோடி தருகிறோம் என்று சொல்ல அதை பார்த்த மக்கள்
குறிப்பிட்ட எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேச முன் அனுமதியாக 7500 ரூபாய் கட்டினாலே நாங்கள் பல அப்ளிகேசன் நிறைவு செய்து தருவோம் என்று கூறி அக்கவுண்ட் நம்பரையும் கொடுத்துள்ளார். இப்படியே பலரிடம் பணம் பெற்று வந்திருக்கின்றன.
இந்நிலையில் அந்த தகவல் கல்யாணி கிட்னி மருத்துவமனை மருத்துவருக்கு செல்ல அவர் பதறி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தன் மருத்துவமனையின் பெயரை சொல்லி யாரோ ஏமாற்றுகிறார்கள் என்று புகார் அளித்திருக்கிறார். இந்த மோசடியை செய்தவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என போலிஸ் மூலம் தகவல் வந்துள்ளது.
குறிப்பிட்ட நபரை இதுவரை கண்டறியவில்லை. ஆனால் எல்லாருக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சின்னமீனைப் போட்டு பெரிய மீனை பிடி என்பது போல பெரிய தொகைக்கு ஆசைப்பட்டு அனைவரும் 7500 இழந்துள்ளனர். இழந்த ஒரு ஆளுக்கு பெரிய தொகை இல்லையென்றாலும் 100கு மேற்பட்டோர் ஏமாந்ததாக தகவல் வந்துள்ளது.