நெற்றியில் விபூதியை மூன்று பட்டையாக அடிப்பதற்கான காரணம் என்ன?
சிவனை வழிபடும் பலரும், இறைவனை வணங்கிய பிறகு ஆலயத்தில் தரப்படும் திருநீற்றை எடுத்து மூன்று விரல்களைக் கொண்ட பட்டையாக அடித்துக்கொள்ளவர்.
வீடுகள், கோவில்கள் போன்ற இடங்களில் இறைவனை பக்தியோடு வணங்கிய பின்னர் விபூதியை பட்டையாக அடித்துக் கொள்கிறோம். அதற்கு ஒரு அற்புதமான காரணம் உள்ளது. நாம் பட்டையடிக்க பயன்படுத்தும் மூன்று விரல்களும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவமாகும். அதில், ஆட்காட்டி விரலால் இடப்படும் கோடு சாமவேதம், நடுவிரல் யஜீர் வேதம், மோதிரவிரல் சாமவேதம் ஆகிய மூன்று வேதங்களைக் குறிக்கிறது. மூன்று பட்டை இடுவது வேதங்கள் மட்டுமின்றி மேலும் பற்பல அர்த்தங்களையும் குறிக்கிறது.
அவை;
1. பிரம்மா, விஷ்ணு, சிவன்.
2. சிவன், சக்தி, ஸ்கந்தர்.
3. அறம், பொருள், இன்பம்.
4. குரு, லிங்கம், சங்கமம்.
5. படைத்தல், காத்தல், அழித்தல்