பிக் பாஸ் வெற்றியாளர்களான ஆரவ் மற்றும் ரித்விகாவை அசால்ட்டாக ஓரம் கட்டிய மலேசியா முகென்..! பிரமிக்க வைத்த சாதனை இதோ..!!
2017 ஆண்டு விஜய் டிவியால் தமிழுக்கு அறிமுகப் படுத்தப் பட்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வருடம் சீசன் 3யை நிறைவு செய்திருக்கின்றது. கடந்த இரண்டு சீசன்களை விடவும் இந்த சீசன் டி ஆர் பியில் எகிறியதுடன் மக்களின் வரவேற்பையும் பெற்றது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது போட்டியாளர்கள் தான்.
நிகழ்ச்சியின் இறுதி வரை அதாவது 106 நாட்களும் விறுவிறுப்பாக சென்றது. இதில் ஆரம்பத்தில் இருந்தே மலேசியாவை சேர்ந்த முகென் தனது தனித்திறமையால் மக்களின் மனதில் தனி இடத்தை பிடித்திருந்தார். கொடுக்கப் பட்ட அத்தனை டாஸ்குகளிலும் தனித்து தெரிந்த முகென் ticket to finale டாஸ்கில் திறமையாக செயற்பட்டு டிக்கட்டை வெற்றி பெற்று நேரடியாக பைனல் சென்றார் .
அதே போல் மக்களின் வாக்குகளால் டைட்டில் வின்னரானார். சீசன் 1 மற்றும் 2ல் முறையே ஆரவ் மற்றும் ரித்விகா டைட்டில் வெற்றி பெற்ற போது மக்கள் இவ்வளவு மகிழ்ச்சியடைந்தார்களா என்பது சந்தேகம் தான். இந்த நிலையில் நேற்றைய தினம் மலேசியா திரும்பிய முகெனை யாரும் எதிர் பார்க்காத முறையில் மலேசிய மக்கள் வரவேற்பு செய்தனர்.
தமிழ் மற்றும் இன்றி மலேசியா வாழ் பலரும் ஒன்று கூடி ஊர்வலமாக முகெனை அழைத்துச் சென்றனர். இப்படி ஒரு வரவேற்பு ரித்விகாவிற்கோ அல்லது ஆரவிற்கோ கிடைக்கவே இல்லை. பலரும் தங்கள் அன்பை வெளிப்படுத்திய அதே நேரம் அதிக அளவான தாய்மார்
தங்கள் மகனாக நினைத்து கட்டி தழுவிய காட்சி கண்ணீர் வர வைத்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை முகெனுக்கு கொடுத்த வரவேற்பு நிச்சயம் அனைவரையும் வியக்க வைத்திருக்கும்.அது மட்டும் இன்றி முகெனுக்கு திரைப்பட வாய்ப்புகளும் தற்போதே குவிய ஆரம்பித்து விட்டது..!
இந்த அன்பை கூற வார்த்தைகள் கிடையாது ❤#MugenRao pic.twitter.com/bR8uKcUAHS
— Mugen Rao (@Mugen_Rao_Offl) October 12, 2019