“ஆரவ்” ராஹியின் திருமணத்தால் கடுப்பான ஓவியா..! முதல் முதல் டுவீட்டரில் போட்ட பதிவு..!!
பிக் பாஸ் சீசன் ஒன்றின் டைட்டில் வின்னரான ஆரவ் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். புதுமுக நடிகையான ராஹியை 4 வருடங்களாக காதலித்து வந்த ஆரவ் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட விடயம் கேட்டு ஓவியா ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள்.
கடந்த 2017ம் ஆண்டு பிக் பாஸ் முதலாவது சீசன் ஆரம்பமானது. இதில் கலந்து கொண்ட ஆரவ் ஓவியாவுடன் நெருங்கி பழகிய நிலையில் ஓவியா ஆரவை காதலிக்க தொடங்கினார். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் வரை மறுத்து வந்த ஆரவ் வெளியே வந்தது ஓவியாவுடன் ஊர் சுற்ற ஆரம்பித்தார்.
டேட்டிங் பார்ட்டி என இருவரும் ஒன்றாகவே சென்றனர். இதனால் ஓவியா மற்றும் ஆரவ் காதலித்து வருகின்றனர் என ரசிகர்கள் நினைக்க ஆரவ் ராஹியை திருமணம் செய்தது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆரவின் திருமணத்திற்கு பலர் சென்றிருந்த போதும் ஓவியா செல்லவில்லை.
இது குறித்து ரசிகர் ஒருவர் ஓவியாவிடம் கேட்டதற்கு ” The world is a dangerous place not because of those who do evil,it’s because of those who look on and do nothing ” என குறிப்பிட்டுள்ளார். இது ஆரவுக்கா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்..!!
The world is a dangerous place not because of those who do evil,it’s because of those who look on and do nothing
— Oviyaa (@OviyaaSweetz) September 11, 2020