பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரியை பழி வாங்கிய அர்ச்சனா.,! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!!
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப் பட்டு நேற்று மீண்டும் வீட்டிற்குள் வந்தவர் தொகுப்பாளினி அர்ச்சனா. இது பைனல் வாரம் என்பதால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப் பட்ட போட்டியாளர்களான நிஷா, ஜித்தன் ரமேஷ், ரேகா, அர்ச்சனா ஆகியோர் கண்களை கட்டிக் கொண்டு வீட்டிற்குள் வந்திருந்தனர்.!
என்ன தான் வீட்டில் இருக்கும் போது ஆயிரம் சண்டைகள் இருந்தாலும் வெளியே சென்று வந்ததும் சக போட்டியாளர்களுடன் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் அர்ச்சனா ஆரியை கண்டுகொள்ளவில்லை. எல்லோரையும் கட்டிப் பிடித்து மகிழ்ச்சியை தெரிவித்த அர்ச்சனா ஆரியின் முகத்தை கூட பார்க்கவில்லை, பின் ஆரியாக வந்து அர்ச்சனாவை கட்டிப் பிடித்தார்.
ஏனோ தானோ என்று கட்டிப் பிடித்த அர்ச்சனா ஆரியின் முகத்தை கூட பார்க்கவில்லை. பலமுறை ஆரி அர்ச்சனாவோடு பேச முயன்ற போதும் கண்டுகொள்ளாமல் அர்ச்சனா சென்றுவிட்டார். அது மட்டும் இன்றி அனைத்து இடங்களிலும் ஆரியை வெட்டி விட்டு பேசினார். இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் சம்யுக்தா வந்திருந்தார்,சம்யுக்தாவை பார்த்த பாலா அழுதுவிட்டார்.
ஆனால் ஆரிக்கு வெளியே இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என தெரிந்தும் யாரும் பெரிதாக ஆரியை கண்டுகொள்ளவில்லை. வீட்டிற்குள் நடந்த பிரச்சனைகளை இன்னும் சம்யுக்தா மற்றும் அர்ச்சனா மறக்கவில்லை என்பதே உண்மை.!!