இந்தியா பிரஜை ஒருவர் புதிய காரை ஆற்றில் தள்ளினார்..!! காரணம் என்ன தெரியுமா??
இந்தியா பிரஜை ஒருவர் தனது பிறந்த நாள் பரிசாக Jaguar ரக காரை கேட்டிருந்தார். ஆனால் அதற்கு மாறாக அவருக்கு BMW சொகுசுக் காரை கொடுக்கப்பட்டது. தான் கேட்ட கார் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த இந்திய பிரஜை தனக்கு வழங்கிய BMW சொகுசுக் காரை ஆற்றில் தள்ளியுள்ளார்.
ஆற்றில் தள்ளப்பட்ட BMW சொகுசுக் கார் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. பின்னர் ஆற்று கரையோரங்களில் உள்ள செடி, கொடிகளில் சிக்கிய காரை அங்கு இருந்த ஒருவர் மீட்க முயற்சி மேற்கொண்டுள்ளதாக காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.
!Advert!
இந்தியாவில், ஒரு BMW சொகுசுக் காரின் விலை சுமார் 3.5 மில்லியன் ரூபாய் (68,000 வெள்ளி); ஒரு Jaguar சொகுசுக் காரின் விலை ஏறத்தாழ 5 மில்லியன் ரூபாய் (97,500 வெள்ளி) கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் ஹர்யானா மாநிலத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.