ஆர்யாவின் அந்தரங்க விடயங்களை ஆதாரத்துடன் வெளியிட்ட கனடா பெண் விட்ஜா.,! பரபரப்பில் ஆர்யா குடும்பம்.!
நடிகர் ஆர்யா மீது கனடாவை சேர்ந்த விட்ஜா என்ற பெண் மோசடி புகார் கொடுத்திருந்த நிலையில் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஆர்யா தனது மனைவி சாயிஷாவுடன் ஒரு வருட திருமண அனிவர்சரியை மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளார். மார்ச் 10ம் திகதியுடன் ஆர்யா சாயிஷாவிற்கு திருமணமாகி ஒரு வருடம் நிறைவடைந்திருந்தது.
இந்த புகைப்படங்கள் ஒரு பக்கம் வைரலாகி வர இன்னுமொரு பக்கம் ஆர்யா கனடா பெண்ணான விட்ஜாவுடன் சாட் செய்த சாட்கள் தற்போது வைரலாகி வருகிறது. ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது, ஏன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாய் என கேட்டு இருக்கிறாய் விட்ஜா அதற்கு ஆர்யா எனக்கு கடன் இருக்கிறது, அதனால் தான் கலந்துகொள்கிறேன் என கூறி இருக்கிறார்.
அந்த நிகழ்ச்சிக்காக நாள் ஒன்றுக்கு ஆர்யா 50 ஆயிரம் பணம் வாங்கியுள்ளார். இந்த 50 ஆயிரம் ரூபாய் வேலைகாரருக்கு கொடுக்கும் பணம், இதற்காக அதில் கலந்துகொள்கிறாயா இதில் இருந்து நின்று விடு என கூறிய போது நான் உன்னை தான் திருமணம் செய்வேன், இது வெறும் நிகழ்ச்சி தான், இதில் யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என கூறியுள்ளார்.
அதே போல் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆர்யா யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. பின்னர் சாயிஷாவுடன் திருமணம் என்பதை அறிந்து ஆர்யாவிடம் கேட்ட போது எனக்கு வேறு வழி தெரியவில்லை. அப்பா பேசியது, நீ என் கடன் அனைத்தையும் கட்டுவாய் என்றால் இப்போதே சாயிஷாவுடனான திருமணத்தை நிறுத்தி விடுகிறேன் என கூறியுள்ளார். ஆர்யா விட்ஜாவுடன் செய்த சாட்கள் தற்போது வைரலாகி வருகிறது.!