மதுவை பகடையாக பயன்படுத்தும் வனிதா விஜயகுமார்.! கதறி அழுத முகென்..!!
பிக் பாஸ் வீட்டில் வனிதா வந்து பலரது கண்ணீருக்கு காரணமாகிவிட்டார்.வந்ததும் அபி முகென் பிரச்சனையை ஆரம்பித்து ஒவ்வொருவராக வெளியே அனுப்ப முயற்சி செய்தார் இதனால் வீட்டில் உள்ள அனைவரும் சோகத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் முகென் அபிராமி இருவரும் பேசிகொண்டிருக்கின்றனர்,
அதன் போது நான் எந்த பெண்ணையும் இது வரை ஏமாற்றியதில்லை, எந்த பெண்ணுக்கும் நம்பிக்கை கொடுத்ததில்லை, உன்னை தோழியாக இன்று வரை உயரத்தில் வைத்திருக்கிறேன், ஆனால் நேற்றைய தினம் மது நான் யூஸ் பண்ணியதாக கூறுகிறார்,நான் சண்டை போட்டதில் இருந்து இன்று வரை நிம்மதியாக இல்லை, அழுதுகொண்டிருக்கிறேன், மற்றவர்கள் முன் நன்றாக இருந்தாலும் என் வலி எனக்கு மட்டும் தான் தெரியும்.
என முகென் அபிராமியிடம் கூறி அழுகிறார். முகெனின் இந்த நிலைக்கு காரணம் முற்று முழுவதுமாக வனிதா தான். வீட்டிற்குள் வந்ததில் இருந்து எல்லோரையும் அழ வைத்துவிட்டார். மக்களிடம் மதுவிற்கு நல்ல இடம் இருந்ததால் அவரை தூண்டி விட்டு தற்போது அவருக்கான இடமும் இல்லை.
நேற்றைய தினம் காரணமே இன்றி மது கோவப்பட்டது மட்டுமின்றி தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தினார். இதனால் தற்போது ரசிகர்கள் மத்தியில் இருந்த மதிப்பு குறைந்துவிட்டது..!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.