லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் அவர்களின் மரணம் பற்றி அபிராமி வெளியிட்ட பதிவு.! வைரலாகும் புகைப்படம் இதோ.!!
பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டவர்களில் இன்றளவும் தொடர்பில் இருப்பவர்கள் சாண்டி, லொஸ்லியா, தர்சன், வனிதா விஜயகுமார் மற்றும் அபிராமி ஆகியோர் தான். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் அபிராமியுடன் இணைந்து ஊர் சுற்றினார் லொஸ்லியா. இவர்கள் இருவருமே அக்கா தங்கையாகவே ரசிகர்களுக்கு உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 15ம் திகதி லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் அவர்கள் மரணமடைந்தார்கள். இவரின் மரணத்திற்கு பலரும் இரங்கல் கூறி வரும் நிலையில் நடிகையும் லொஸ்லியாவின் நெருங்கிய தோழியுமான அபிராமி பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில் “எப்படி ஏற்றுக் கொள்வோம் அப்பா இனி நீங்கள் இல்லை என்பதை. நீங்கள் எங்களை அழைப்பதை எப்படி மறப்போம், உங்கள் கால்களில் விழுந்து எப்படி ஆசீர்வாதம் வாங்குவோம், உங்கள் ஆறுதல் வார்த்தைகளை எப்போது கேட்போம், இனி இவை எதுவும் எங்களுக்கு கிடைக்கப் போவதில்லை, நாங்கள் உங்களை அதிகம் மிஸ் செய்கிறோம் மரிய நேசன் அப்பா என பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் கொமெண்ட் செய்து வருகின்றனர்.!