பிரியாணி தரும் காதலனுக்காக பெற்ற குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த வழக்கில் கைதான அபிராமியின் நிலை என்ன தெரியுமா.? இதோ முழு விபரம்.!!
2018ம் ஆண்டு ஒட்டுமொத்த இந்திய மக்களையும் அதிர வைத்த சம்பவம் பிரியாணி காதலனுக்காக 2 பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு கணவரையும் கொலை செய்ய முயன்ற அபிராமி பற்றி தான். குன்னூரை சேர்ந்த விஜய், இவர் வங்கி ஒன்றில் பணி புரிந்து வந்த நிலையில் அபிராமி என்பவரை காதலித்து திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு 7 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் இருந்தனர்.
விஜய் மனைவியின் மீதான அன்பால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மனைவி மற்றும் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதுடன் பிரியாணி வாங்கி கொடுப்பது வழமை, அப்படி பிரியாணி சாப்பிட்ட கடையில் பணி புரிந்த சுந்தர் என்பவர் மீது அபிராமிக்கு காதல் வந்தது. இருவரும் டிக் டாக்கில் பல வீடியோக்கள் செய்து பிரபலமான நிலையில் சுந்தரும் ஏற்கனவே திருமணமானவர்.
இந்த கள்ளக் காதல் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்த நிலையில் தூக்க மாத்திரை போட்டு கணவர் உட்பட அனைவரையும் கொலை செய்யும் அளவிற்கு சென்றுள்ளது. கணவர் இரவு பால் குடிக்காததால் தப்பிக் கொள்ள 4 வயது குழந்தை படுக்கையில் இறந்துள்ளது. 7 வயது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்திருந்தார் அபிராமி. இருவரும் வீட்டை விட்டு ஓடிபோன நிலையில் பொலீஸாரால் கைது செய்யப் பட்டனர்.
புழல் சிறையில் அடைக்கப் பட்டுள்ள இருவருக்கும் எதிராக சுமார் 22 உறவினர்கள் சாட்சியாக மாறியிருந்தனர். இதில் அபிராமியின் அப்பாவும் உள்ள நிலையில் தற்போது 21 சாட்சிகள் விசாரிக்கப் பட்டு முடிந்து விட்டது. அனைத்து சாட்சிகளும் அபிராமிக்கு எதிராக இருந்த நிலையில் அபிராமியின் குற்றமும் நிரூபிக்கப் பட்டுள்ளது.
இன்னும் ஒரு சாட்சியின் பின் அபிராமிக்கு தண்டனை கொடுக்கப் படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அடுத்த கட்ட விசாரணையில் அபிராமிக்கு என்ன தண்டனை என்பது தெரியவரும், பொது மக்களின் கருத்து யாதெனில் அபிராமிக்கு அதிக பட்ச தண்டனை தர வேண்டும் என்பதே.. பொருத்து இருந்து பார்ப்போம்.!!/