இலங்கையில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர சம்பவம்..! 6பேர் பலி 56 பேர் காயம்..!!
இலங்கை களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இது வரை 6 பேர் மரணமடைந்துள்ளதுடன், 56 பேர் காயமடைந்துள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை எல்லிபிட்டியில் இருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்த பேரூந்தும்..
!Advert!
கொழும்பில் இருந்து காலிக்கு சென்றுகொண்டிருந்த பேரூந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் ஏற்பட்டுள்ள இந்த விபத்திற்கு தனியார் மற்று அரச பேரூந்தின் அசுர வேகமே காரணம் என பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடந்தவர்களில் சிலரது நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக அறியமுடிந்துள்ளது. விபத்தில் மரணமடைந்த 6 பேரின் உறவினர்களுக்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மை காலமாக இலங்கையில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிட தக்கது…!!
!Advert!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.