அறுவை சிகிச்சை முடிந்த பின் வீல் ஷேரில் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட தொகுப்பாளினி அர்ச்சனா.! நலம் பெற பிரார்த்திக்கும் ரசிகர்கள்.!!
உடல் நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட தொகுப்பாளினி அர்ச்சனா வீடு திரும்பியுள்ளார். தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் முதல் மூன்று இடத்தில் ஒருவராக இருக்கும் அர்ச்சனா ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒருவர்.
எப்போதும் உற்சாகத்துடனும் சிரிப்புடனும் இருக்கும் அர்ச்சனா முதல் முறை சோர்வாக இருக்கும் வீடியோவை அவரது மகள் சாரா வெளியிட்டுள்ளார். அறுவை சிகிச்சை நல்ல படியாக முடிந்த நிலையில் அர்ச்சனாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
இரண்டு வாரங்கள் கட்டாய ஓய்வு தேவை என டாக்டர்கள் கூறியுள்ள நிலையில் காரில் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட அர்ச்சனா வீல் ஷேரில் வீட்டிற்குள் சென்றது கண் கலங்க வைத்துள்ளது, எப்போதும் சுறுப்பாக இருக்கும் அர்ச்சனா மீண்டும் அதே துடிப்புடன் வர வேண்டும் என்பதே எமது பிரார்த்தனை.!