நடிகர் பிரஷாந்தை ஏமாற்றிய பெண்.! முதல் முறை மனம் திறந்து பேசிய நடிகர் பிரசாந்த்.!!
நடிகர் பிரசாந்தின் வாழ்க்கையில் இடம்பெற்ற சோக சம்பவத்தை அவரே பிரபல யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, காதல் இளவரசன் என கொண்டாடப்பட்ட நடிகர் பிரஷாந்த் அஜித், விஜயை விட அன்றைய இளசுகளின் மனதை வென்று இருந்தார்.
இன்றளவும் அனைவராலும் ரசிக்கப் படும் பிரசாந்த் அண்மையில் கொடுத்த பேட்டியொன்றில் தனது வாழ்க்கை பற்றி பகிர்ந்துள்ளார். அதில் எனக்கு திருமண வாழ்க்கை வெறுத்துவிட்டது, என் வாழ்க்கை எப்படி எப்படியோ அமையும் என கற்பனை செய்திருந்தேன், ஆனால் என் வாழ்க்கை முற்றிலும் மாறிப்போனது,
ஏற்கனவே திருமணமாகி டிவோர்ஸ் ஆனவர் எனது மனைவி, இதனை மறைத்து என்னை திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி சில வருடங்கள் சென்ற பின்னரே அவர் திருமணமான விடயமே எனக்கு தெரிய வந்தது, வாழ முயன்று முடியாமல் போக பிரிந்துவிட்டேன்,
இந்த பிரிவில் கூட பல போராட்டங்களை சந்தித்தேன், இப்போது தான் ஓரளவு மீண்டு இருக்கேன், வாழ்வில் பாதி நாட்கள் நரகமாக முடிந்து போனது என தெரிவித்துள்ளார். இந்த விடயம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.!/