கல்லறையின் முன் நின்று கதறி அழுத நடிகர் சூர்யா.சோகத்தில் ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ இதோ.!!
கல்லறையின் முன் நின்று நடிகர் சூர்யா கதறி அழுத வீடியோ ஒன்று வைரலாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் விஜயை விட ரசிகர்களின் அதிக வரவேற்பை பெற்றிருந்தவர் நடிகர் சூர்யா. சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துக் கொண்டிருந்த சூர்யாவிற்கு திடீரென சறுக்கல் ஏற்பட்டது.
சூர்யாவின் பல திரைப்படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது. இதனால் மிகப் பெரிய சரிவை சந்தித்தார் சூர்யா. இடையில் ஒரு சில திரைப்படங்கள் ஹிட் கொடுத்தாலும் ஆரம்பத்தில் இருந்த சூர்யாவை பலரால் காணமுடியவில்லை.இந்த நிலையில் அண்மையில் வெளியான சூர்யாவின் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆக உச்சத்தில் இருக்கிறார் சூர்யா.
கடந்த சில மாதங்களாக திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த சூர்யாவால் தனது நெருங்கிய நண்பரான புனித் ராஜ்குமாரின் மரணத்திற்கு செல்ல முடியவில்லை. இன்றைய தினம் கல்லறைக்கு சென்ற சூர்யா கதறி அழுதுள்ளார், இதனை தொடர்ந்து மீடியாக்களிடம் பேசிய சூர்யா இந்த இழப்பை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாமல் உள்ளது,
புனித் மிகவும் நல்ல மனிதர், அவரது மரணம் என்பது திரையுலகத்திற்கும் ரசிகர்களுக்கும் மிகப் பெரிய இழப்பு என கூறி அழுதுள்ளார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.!