ஒரு வேளை சாப்பாட்டிற்கு வழி இன்றி தவித்த நடிகை அமலா..! உதவிய பிரபல நடிகர்..!!
தமிழ் சினிமாவில் 80கள் தான் பொற்காலம் என்று சொல்லலாம். அத்தனை அழகிய நடிகைகள்.. சிறப்பான நடிப்பு … மனம் கவரும் பாடல்கள். .. மனதை வருடும் இசை என 80களை யாராலும் மறக்க முடியாது. அன்றைய நடிகைகள் நடித்தார்கள் இன்றைய நடிகைகள்..?? கேள்விக் குறி தான். 80 களில் சினிமாவில் தோன்றியவர் தான் நடிகை அமலா. தனது நடிப்பாலும் புன்னகையாலும் இளைஞர்களை கவர்ந்தார்.
இவர் தனது கடந்த காலம் பற்றி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அதில் அம்மா அப்பா இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும். இந்த சண்டையை பார்த்து வளர்ந்த எனக்கு குடும்பவே வேண்டாம் என்றானது. அதனால் சென்னையில் தனியாக தங்கி படித்து வந்தேன்.
அம்மா அப்பாவின் சண்டை அதிகமான நிலையில் இருவரும் பிரிவதற்கு முடிவு எடுத்து பிரிந்துவிட்டனர். அதன் பின் எனக்கு படிப்பதற்கு கையில் பணம் இருக்கவில்லை. சாப்பாட்டுக்கு பணம் இல்லை. ஒரு நேரம் தான் சாப்பாடு. ஹோட்டல் ஒன்றில் பார்ட் டைம் சர்வர் வேலைக்கு சென்றேன்.
அப்போது தான் டி ஆர் ராஜேந்தரன் சார் அவர்கள் என்னை பார்த்தார்கள். அவரது மைதிலி என் காதலி திரைப்படத்தில் நடிக்க வைத்தார். அதன் பின் தான் சரியாக சாப்பிடவே ஆரம்பித்தேன். என் வாழ்க்கை முற்றிலும் மாற்றியது டி ஆர் சார் தான் என நன்றி கூறியுள்ளார்.
நாகார்ஜுனாவை திருமணம் செய்து 2 மகன்களின் தாயாக இருக்கும் அமலா நம்ம சமந்தாவின் மாமியார் என்பது குறிப்பிட தக்கது..!!