பாலியல் தொல்லை சர்ச்சையில் நடிகை பானுப்பிரியா..!இவருக்கே இந்த நிலையா !?
நடிகை பானு பிரியா மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பானுப்ரியா மீது பெண் ஒருவர் புகார் கொடுத்திருந்தார். குறித்த புகாரில் பல வருடங்களாக பானுப்பிரியா வீட்டில் வேலை செய்து வந்த தனது 16 மகளுக்கு 10 மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதன் பின் பானுப்பிரியாவின் சகோதரன் தங்கள் வீட்டில் பணி புரிந்துவிட்டு நகை பணம் போன்றவற்றை தாயும் மகளும் களவாடி போனதாக பொலீஸில் புகார் கொடுத்தார். இது இப்படி இருக்க 16 வயது சிறுமியை வேலைக்கு வைத்திருந்தது தவறு என குழந்தை நல அமைப்புகள் இன்னுமொரு வழக்கு பதிவு செய்தது.
இவற்றுடன் வேலைக்கு நின்ற தன்னுடன் பானுப்பிரியாவின் சகோதரன் தவறாக நடந்துகொண்டதாக கூறியுள்ள குறித்த சிறுமி பாலியல் தொல்லை கொடுத்ததால் தான் வீட்டை விட்டு வெளியேறியதாக வாக்குமூலம் கொடுத்தார். இதனை தொடர்ந்து பானு ப்ரியா மற்றும் அவரது சகோதரன் மீது 3 வழக்குகள் பதிவாகி உள்ளது.இந்த நிலையில் பானு ப்ரியா கைது செய்தப் படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது..!