1984ம் ஆண்டு எடுத்த புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ள நடிகை குஷ்பு..! குஷ்புவா இது என வியக்கும் ரசிகர்கள்…புகைப்படம் இணைப்பு..!!
80களில் சினிமாவில் அறிமுகமாகி இன்று வரை ரசிகர்கள் மனதில் நிலையான இடம் பிடித்திருப்பவர் நடிகை குஷ்பு. பல சர்ச்சைகளுக்கு முகம் கொடுத்தாலும் அவரது இடத்தை பிடிப்பதென்பது இன்றைய நடிகைகளுக்கு முடியாத ஒன்றாகும்.
ஆரம்பத்தில் பிரபுவை காதலித்து பிரிந்த குஷ்பு இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் இளவயது தொழிலதிபர் என விருதும் வென்றுள்ளார்.
குஷ்பு சினிமாவில் மட்டும் இன்றி அரசியலிலும் தனக்காக இடத்தை தக்கவைத்து மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.
தற்போது லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அண்மையில் அவர் 1984ம் ஆண்டு எடுத்த புகைப்படம் ஒன்றையும் அண்மையில் எடுத்த புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு எது பெஸ்ட் என கேட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது..!!