தமிழில் 2 திரைப்படங்கள் மட்டுமே நடித்த நடிகைக்கு கோயில் கட்டி அபிஷேகம் செய்த ரசிகர்கள்.!! யாருக்குன்னு நீங்களே பாருங்கள்.!!
நயன்தாரா மற்றும் குஷ்புவிற்கு பின் தமிழ் ரசிகர்களால் நடிகை ஒருவர் கோயில் கட்டி அபிஷேகம் செய்யப் பட்டுள்ளார். சில நடிகைகள் சினிமாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ள மிகவும் போராடுவார்கள், எப்படியாவது சினிமாவில் சாதித்து விட வேண்டும் என்பதே அவர்களது ஆசையாக இருக்கும்,
ஆனால் அந்தோ பரிதாபம் சில நாட்களிலேயே அவர்களின் ஆசை நிராசையாக மாறி விடும். சிலர் பல வருடங்கள் சினிமாவில் நிலைத்து நிற்பார்கள் ஆனால் அவர்களுக்கான அங்கீகாரம் ரசிகர்களிடம் இருந்து கிடைக்கவே கிடைக்காது.
அந்த வகையில் பிரபல நடிகையான இவர் வெறும் இரண்டு படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் நிலையான இடம் பிடித்து விட்டார். தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கு நிதி அகர்வால் தமிழில் சிம்புவுடன் ஈஸ்வரன் திரைப்படத்திலும், ஜெயம் ரவியுடன் பூமி திரைப்படத்திலும் நடித்தார்.
அவ்வளவு தான், ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார். படம் வெற்றி திரைப்படமா என்று தெரியாத போதும் நாயகி வெற்றி நாயகி ஆகிவிட்டார். இரண்டு திரைப்படத்தில் நடித்த நிதி அகர்வாலை கொண்டாடிய ரசிகர்கள் அவருக்காக சிலை வைத்துள்ளனர். அது மட்டும் இன்றி பால் அபிஷேகம் செய்து கொண்டாடி உள்ளனர்!
She deserves @AgerwalNidhhi ❤️
Love you @AgerwalNidhhi ❤️❤️❤️#NiddhiAgerwal #NationalcrushNidhhi https://t.co/Qs2LEdXF1n
— Niddhi Agerwal Trends™ (@NidhhiFanTrends) February 14, 2021