ஒரே வருடத்தில் எயிட்ஸ் நோயால் 3.2 லட்சம் குழந்தைகள் மரணம்.! அதிர வைக்கும் காரணத்தை வெளியிட்ட யுனிசெப் அமைப்பு.!!
எச் ஐ வி தொற்றுக்கு இலக்காகி கடந்த வருடம் மாத்திரம் 3.2 லட்சம் குழந்தைகள் பலியாகி உள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. தவறான பாலியல் ரீதியான உறவால் பரவும் எச் ஐ வி தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி வந்தாலும், கட்டுப் படுத்தவோ குணப்படுத்தவோ மருந்து இன்றளவும் கண்டுபிடிக்கப் படவில்லை,
மனிதர்கள் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே இந்த நோயை கட்டுப் படுத்த முடியும் என்ற நிலையில் பெற்றோரின் தவறான செயற்பாடுகளால் குழந்தைகள் எச் ஐ வி நோயினால் பாதிக்கப் படுகின்றனர். இந்த நோயுக்கும் குழந்தைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் பெற்றோரின் செயற்பாடுகளால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப் படுகின்றனர்.
யுனிசெப் அமைப்பின் செயல் இயக்குனர் ஹன்ரிட்டா கூறுகையில் ஒவ்வொரு 100 செக்கனு ஒரு முறை எச் ஐ வி நோயால் குழந்தைகள் அல்லது 20 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் எச் ஐ வி நோயினால் பாதிக்கப் படுகின்றனர்.பாதிக்கப் படுபவர்களில் 1% வீதமானவர்களை கூட காப்பாற்ற கடினமாக இருக்கிறது என தெரிவித்துள்ள ஹன்ரிட்டா ,
தற்போது கொரோனா வைரஸ் பரவலால் இது வரை பார்த்து வந்த சிகிச்சை முறைகள் கூட கடினம் என தெரிவித்துள்ளார். பெற்றோரின் கவனயின்மையால் மரணமடையும் குழந்தைகளின் நிலையை யோசிக்கும் போது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.!