தனது காதல் பற்றி முதல் முறை வாய் திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்..! வட போச்சே..!
பலதரப்பட்ட மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து பலரின் மனதில் இடம் பிடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். செக்கச் சிவந்த வானம், கனா போன்ற படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் புதிய படம், விஜய் தேவர்கொண்டாவின் புதிய படம் மற்றும் பல புதிய படங்களில் நடித்து வருகின்றார்.
அதே நேரம் அவரைப் பற்றிய பல வதந்திகள் வெளிவருகின்றது. ஐஸ்வர்யா ராஜேஷ் யாரையோ ஒருவனை காதலிப்பதாகவும் திருமணம் செய்துவிட்டதாகவும் வதந்திகள் வெளிவந்த வண்ணமிருக்கும் போது அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
‘என்னைப் பற்றிய எல்லா வதந்திகளையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். என்னுடைய காதலனை பார்க்க எனக்கே ஆசையாக தான் இருக்கு. உங்களுக்கு தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கோ…
தேவையில்லாமல் வதந்திகளை பரப்பாதீர்கள். அப்பிடி ஏதும் இருக்குமாயின் நானே உங்களுக்கு சொல்லுவேன்’ என ட்விட்டரில் பதில் சொல்லியிருக்கிறார்.
Hey guys I have been hearing rumours on my love story… pls let me also know who tat guy is .. very much eager to know??? pls stop spreading such fake news … if something happens I would be first person to inform u all .. very much single an happie have a great weekend
— aishwarya rajessh (@aishu_dil) May 10, 2019