காதல் தோல்வி, திடீரென மரணித்த இரண்டு அண்ணன்கள்..! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்..!!
இன்று தமிழ் சினிமா உலகில் தனக்கான தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனால் அவர் இந்த இடத்திற்கு அவர் வருவதற்கு பல துன்பங்களை சந்தித்துள்ளார். இது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி ஒன்றில் கூறிய விடயங்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எமக்கு தெரிந்து ஐஸ்வர்யாவிற்கு ஒரு சகோதரன் இருக்கிறார்.
வள்ளி, கேளடிகண்மணி, அழகு, போன்ற சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்த மணிகண்டன் ஐஸ்வர்யா ராஜேஷின் உடன் பிறந்த அண்ணன். இது ஐஸ்வர்யாவின் ரசிகர்கள் அறிந்த விடயம் தான். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஏற்கனவே இரண்டு சகோதரர்கள் இருந்த நிலையில் இருவரும் மரணமடைந்துள்ளனர். ஐஸ்வர்யாவிற்கு மூன்று அண்ணன்களான ராகவேந்திரா, ராஜ், மணிகண்டன்.
இதில் கல்லூரி படிக்கும் போது ராகவேந்திரா ஒரு பெண்ணை காதலித்துள்ளார், அவரது காதல் தோல்வியில் முடிந்த நிலையில் திடீரென ஒரு நாள் மரணமடைந்தார். இவரது மரணம் தற்கொலை என பலர் கூறிய போதும் உண்மை நிலை அன்று எனக்கு தெரியவில்லை என தெரிவித்த ஐஸ்வர்யா ராஜேஷ், அது என் 12 வயதில் நடந்த சம்பவம்.
அடுத்து அண்ணா ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவிட்டு வேலைக்கு சென்று சில மாதங்கள் கூட ஆகவில்லை, வீதி விபத்தொன்றில் மரணமடைந்தார். 11 படித்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா ராஜேஷின் வாழ்க்கை அப்போது தான் மாறியுள்ளது. பகுதி நேர வேலையாக பெசன்ட் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் புது பொருட்கள் அறிமுகம் செய்யும் பெண்ணாக பணிக்கு சேர்ந்துள்ளார்.
அங்கு சோஸ் விற்கும் வேலை கிடைத்துள்ளது. அதற்காக ஒரு நாளைக்கு 225 ரூபா சம்பளம் கொடுத்துள்ளனர். அதன் பின் கல்யாணம், பேர்த் டே போன்ற நிகழ்ச்சிகள் ஹோஸ்ட் செய்ய ஆரம்பித்துள்ளார். இதன் மூலம் மானாட மயிலாட, கலக்க போவது யாரு, போன்ற நிகழ்ச்சிகளில் வாய்ப்பு கிடைத்தது அதன் பின் தான் நானும் எனது குடும்பமும் கொஞ்சம் தலை நிமிர ஆரம்பித்தோம், என்ன பணம் மகிழ்ச்சி என இருந்தாலும் இன்று வரை ஈடு செய்ய முடியாத இழப்பு என் அண்ணன்களின் மரணம் என தெரிவித்துள்ளார்..!!