போகும் இடமெல்லாம் அவமானப் படுத்தப் படும் நடிகர் சஞ்சீவ்..! அவருக்கு இருக்கும் இந்த நோய் தான் காரணமாம்..!
தமிழ் தொலைகாட்சிகளில் மக்கள் ஆதரவை அதிகம் பெற்ற சீரியல்களில் முன்னணியில் இருந்த சீரியல் ராஜா ராணி சீரியல் தான். செம்பா, சின்னய்யா, இந்த இரண்டு கதாபாத்திரங்களுக்காகவே இந்த சீரியலை மக்கள் ரசித்து வந்தனர்.
காதல், திருமணம், குடும்பம் என அத்தனை அழகாக இருந்தது ராஜா ராணி சீரியல். செம்பாவாக ஆல்யா மானசா சின்னய்யாவாக சஞ்சீவ் நடித்தார்கள். சீரியலில் மட்டும் இன்றி நிஜத்திலும் ஜோடியானார்கள். இந்த நிலையில் தற்போது தொலைகாட்சியில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் சஞ்சீவ்.!
அதில் அவர் பட்ட அவமானங்களையும் கூறியுள்ளார். சஞ்சீவிற்கு “அல்டோ ஃபேபியா என்ற நோய் இருக்கிறதாம். இது சிறு வயதில் இருந்தே இருக்கிறதாம். இந்த நோயால் பாதிக்கப் பட்டவர்கள் உயரத்திற்கு பயப்படுவர்களாம். சஞ்சீவிற்கு இந்த நோய் இருப்பதால் உயரத்திற்கு செல்ல மாட்டாராம்.
ஆனால் ராஜா ராணி சீரியலில் மலையில் நடிக்கும் காட்சி இருந்ததாம் தனக்கு இருக்கும் நோய் பற்றி கூறிய போது அப்படியானால் ஏன் நடிக்க வந்தாய் குணமாகிய பின் நடிக்க வந்திருக்கலாமே என திட்டினார்களாம், அனைவர் முன்பும் திட்டியதால் கண்ணீர் விட்டு அழ தோன்றியதாம் என சஞ்சீவ் கூறியுள்ளார் .!