கட்டிலுக்கு செல்லும் போதும் பயத்துடனே சென்றேன், திருமணத்தின் அந்த நிமிடங்கள்.!! விவாகரத்து பற்றி முதல் முதல் பேசிய அமலாபால்.!!
அவருடன் வாழ்ந்த ஒவ்வொரு நிமிடமும் பயந்து பயந்தே வாழ்ந்தேன் என நடிகை அமலா பால் பேட்டி ஒன்றில் கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிந்து சமவெளி என்ற சர்ச்சை திரைப்படத்தினூடாக தமிழ் சினிமாவில் நுழைந்த அமலா பால் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.
சினிமாவில் சாதிக்க ஆரம்பிக்கும் போதே இயக்குனர் ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த திருமண வாழ்க்கை நிலைக்கவில்லை. திருமணமாகி ஒரே வருடத்தில் விவாகரத்து செய்துகொண்டனர். அதன் பின் விஜய் டாக்டர் ஒருவரை திருமணம் செய்து அவர்களுக்கு தற்போது குழந்தை ஒன்றும் உள்ளது.
இந்த நிலையில் தனது முதல் கணவருடனான விவாகரத்து பற்றி முதல் முதல் பேசியுள்ளார் அமலா பால். இதன் போது விரும்பியே காதலித்தேன், திருமண வாழ்க்கை காதல் வாழ்க்கை போல் இருக்கும் என்றே திருமணம் செய்துகொண்டேன், ஆனால் தாலி கட்டியதுமே காதல் வாழ்க்கை முடிந்து போனது, மூச்சு எடுப்பதாக இருந்தாலும் அவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் கேட்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் பயம், எப்போது என்ன நடக்குமோ என்று மனம் அடித்துக் கொள்ளும். உணவு உடை அனைத்துமே கணவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பிடித்ததாக மாறிப்போனது. எப்போதும் பயந்து பயந்து வாழ்ந்த வாழ்க்கை 1 மாதத்திலேயே வெறுத்துப் போனது முடிந்த அளவில் பொறுமையாக இருந்தேன் முடியவில்லை.
கட்டிலுக்கு செல்லும் போதும் பயத்துடன் என்றால் அந்த கல்யாண வாழ்க்கை ஏன் என்ற எண்ணம் வந்தது. அதனால் இருவரும் பேசி விவாகரத்து செய்துகொண்டோம். .இப்போது அவர் அவருடைய வாழ்க்கையை வாழ்க்கிறார் என தெரிவித்துள்ளார்.!!