ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தது அமேசான்!
அமேசான் நிறுவனமானது உலகின் அதிக லாபம் ஈட்டுகின்ற மாபெரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஆகும். இங்கு பணிபுரியும் பணியாளர்களின் சம்பள விபரங்கள் தொடர்பில் பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் எழுந்தவண்ணம் இருந்தன. ஆனால் தற்போது அதையெல்லாம முறியடிக்கும் முகமாக அமேசானின் திடீர்முடிவானது அமைந்துள்ளது.
அமேசான் நிறுவனம் செவ்வாய்க்கிழமை தங்களது ஊழியர்களின் ஒரு நாள் குறைந்தபட்ச ஊதியத்தினை அடுத்த மாதம் முதல் 15 டாலராக உயர்த்தி அறிவித்துள்ளது. அமேசானில் ஊழியர்களுக்குக் குறைந்த அளவிலான சம்பளம் மட்டுமே அளிக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அமேசான் இந்த முடிவினை எடுத்துள்ளது.
இதனால் அமேசான் நிறுவனத்தின் அமெரிக்க ஊழியர்களுக்கு வருகின்ற நவம்பர் 1-ம் தேதி முதல் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு 1100 ரூபாய்ச் சம்பளமாகக் கிடைக்கும். அமேசான் நிறுவனம் தங்களது போட்டி நிறுவனங்களான வால்மார்ட் மற்றும் டார்கெட் கார்ப் நிறுவனங்களை விட 3 டாலர் அதிக ஊதியத்தினை அளிக்க உடிவு செய்துள்ளது.
இதனால் வால்மார்ட் மற்றும் டார்கெட் கார்ப் நிறுவனங்களும் விரைவில் தங்களது ஊழியர்களின் சம்பளத்தினை உயர்த்தவும் வாய்ப்புகள் உள்ளது.
உலகின் இரண்டாம் மிகப் பெரிய மதிப்பு வாய்ந்த நிறுவனமான அமேசான் எடுத்துள்ள இந்த முடிவினால் 3,50,000 ஊழியர்கள் பயனடைய உள்ளார்கள்.