அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் பணி நீக்கம்..!!!
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட வந்த ஜோன் போல்டனை பணி நீக்கம் செய்துள்ளார். இந்த விடயம் குறித்து அமெரிக்கா ஜனாதிபதி டுவிட்டர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஜோன் போல்டன் ஈரான் மற்றும் வடகொரியா விவகாரத்தில் அதிபர் டொனால் டிரம்ப் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார். இதை விட அந்த நாடுகளுடன் அமெரிக்கா யுத்தம் நடத்த வேண்டும் என்ற கொள்கையை அடிக்கடி தெரிவித்துள்ளார்
இதன் காரணமாக ஜேர்ன் போல்டனின் இத்தகைய செயற்பாடு மற்றும் வெளியுறவு கொள்கைகள் அமெரிக்கா ஜனாதிபதிருக்கு பிடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டனை பணி நீக்கம் செய்து விட்டதாக டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதனை அடுத்து அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு ஆலோசகரின் பெயர் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.