” அழாதீங்க தாத்தா குணமாகிடும் ” ஐஸ்வர்யா ராயின் (பேத்தியின் ) மகளால் உருகிய அமிதாப் பச்சன்..! பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள்…!!
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமை படுத்தப் பட்டிருந்த நிலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் இருவரும் நோயில் இருந்து முற்றாக குணமடைந்து நேற்றைய தினம் வீடு திரும்பினார்கள்.
வீடு திரும்பியதும் தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிந்துவித்து நடிகை ஐஸ்வர்யா பதிவொன்றை பகிர்ந்திருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் கெமெண்ட் செய்து வரும் நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பகிர்ந்துள்ள பதிவில் தனது பேத்தியான ஆரத்தியா பற்றி உருக்கமாக எழுதியுள்ளார்.
அதில் தாயும் சேயும் நலமுடன் வீடு திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது. இருவருக்கும் இறைவனின் அருளும் எங்கள் ஆசியும் என்றும் இருக்கும். என் பேத்தியின் குறும்புகளை நான் மிகவும் மிஸ் செய்கிறேன், ஆனால் அவள் இறுதியாக கூறிச் சென்ற வார்த்தைகள் எனக்கு தைரியம் கொடுக்கிறது என குறிப்பிட்டதுடன்
“தாத்தா அழாதீங்க, சீக்கிரமே குணமாகி வீட்டுக்கு வந்துடுவீங்க, உங்களுக்காக சாமிகிட்ட வேண்டுவேன்” என மழலை மொழியில் கூறியது போதுமானது. இன்னும் பல வருடங்கள் என் ஆயுள் நீடிக்கும் என கூறியுள்ளார். இந்த பாசம் தான் தாத்தா பேத்திக்கானது என பலரும் பகிர்ந்து வருக்கின்றனர்..!!