இந்த இலைகளை பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா.? சித்தர்கள் கூறிய அற்புதமான மருத்துவம் இதோ..!!
அம்மான் பச்சரிசி கீரை என்பது இந்தியா, இலங்கை உட்பட சில நாடுகளில் இலகுவாக கிடைக்கக் கூடிய மூலிகையாகும். சித்தர்களால் அன்று முக்கிய மூலிகையாக பார்க்கப் பட்டாலும் இன்றளவில் எம்மிடம் இதற்கான மதிப்பு சிறிதளவும் இல்லாமல் போய்விட்டது. இலகுவாக கிடைக்கும் எதையும் நாம் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருப்பது தான் இதற்கான காரணம். ஆனால் அம்மான் பச்சரிசி கீரை பல் நோய்களுக்கு தீர்வாகிறது.
இன்று இவை பற்றி பார்க்கலாம். அம்மான் பச்சரிசி கீரையை எடுத்து நன்றாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பெரிய வெங்காயம், முழுமையான பூண்டு ஒன்று எடுத்து சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பின் அடுப்பில் சட்டியை வைத்து அதில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு,
சிறிது சூடானதும் பூண்டு மற்றும் வெங்காயத்தை போட்டு அதனுடன் அம்மான் பச்சரிசி இலைகளை சேர்த்து வதக்கி இறக்கி வைத்து நன்றாக ஆறியதும் மிக்ஸியில் அரைத்து துவையல் போல் செய்து சாப்பிட்டால், மூலம், மலச்சிக்கல் போன்றவை குணமாகும். உடலில் உஷ்ணம் முற்றிலும் குறைந்து விடும்,
இதனை வாகனம் ஓட்டும் ஆண்கள், வயலில் வேலை செய்யும் ஆண்கள், மற்றும் பாரம் சுமக்கும் ஆண்கள் வாரத்தில் இரண்டு முறை முடிந்தால் சாப்பிட்டு வரலாம். அப்படி சாப்பிடுவதால் மூலப் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க முடியும். அடுத்து வாய், நாக்கு, வயிற்றுப் புண்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.
இதன் இலைகளை கழுவி பாசிப்பயறு சேர்த்து சமைத்து நெய்விட்டு தாளித்து சாப்பிட்டு வர மேல் குறிப்பிட்ட நோய்கள் குணமாவதுடன் கொப்பளங்கள் முற்றிலும் குணமாகிவிடும். என்ன பிரண்ட்ஸ் இந்த குறிப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா.? அப்படியானால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.!