தாலி கட்டும் நேரத்தில் சம்மதமா என கேட்ட மணமகன்.!மணமகள் செய்த கேவலமான செயலால் அதிர்ந்து போன பெற்றோர். வைரலாகும் வீடியோ.!!
திருமணம் பேசி நிச்சயம் செய்து தாலி கட்டும் நேரத்தில் இளம் பெண் செய்த செயலால் மணமகன் உட்பட குடும்பத்தினர் அவமானப்பட்ட சம்பவம் ஒன்று இந்தியாவில் நடந்துள்ளது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மட்டகண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த். பட்டதாரி இளைஞரான இவருக்கு தூனேரி கிராமத்தை சேர்ந்த பிரியதர்சினி என்ற யுவதியை பெற்றோர் திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர்.
ஆக்டோபர் 29ம் திகதி திருமணம் குடும்பத்தினர் முன்னிலையில் நடக்க ஏற்பாடு செய்யப் பட்டது. இருவரும் படுகர் இனத்தை சேர்ந்தவர். இவர்களின் இன வழக்கப் படி தாலி கட்டுவதற்கு முன் மணமகன் மணமகளிடம் “இந்த திருமணத்தில் உனக்கு சம்மதமா.?” என்று கேட்க வேண்டும். மணம்பெண் ஆம் என்று சொன்னால் மட்டுமே தாலி கட்ட வேண்டும்.
அதன்படி ஆனந்த், பிரியதர்சினியிடம் திருமணம் செய்துகொள்ள சம்மதமா என இருமுறை கேட்ட போது அமைதியாக இருந்துள்ளார். மூன்றாவது முறை கேட்ட போது கடுப்பான பிரியதர்சினி இன்னும் ஒரு மணித்தியாலம் பொறுத்துக் கொள்ளுங்கள் ,என் காதலன் வந்து எனக்கு தாலி கட்டி விடுவான். எனக்கு இந்த திருமணத்தில் சிறிதும் விருப்பமில்லை.
நான் பார்த்தீபனை தான் காதலிக்கிறேன். அவன் என் காதலுக்காக அவனது மனைவியை விவாகரத்து செய்தான். அவனது குழந்தைகளை நானே பார்க்க வேண்டும். இன்று உங்களை கல்யாணம் செய்தால் அவனது காதலுக்கு துரோகம் செய்து விட்டதாக அர்த்தம் என கூறியுள்ளார். இதனால் அதிர்ந்து போன பெற்றோர் பிரியதர்சினியை சமாதானம் செய்த முயன்றுள்ளனர்.
ஆனால் முடியாத போது இனிமேல் வீட்டு பக்கம் கூட வராதே என விரட்டி விட்டுள்ளனர். காதலில் விழாமல் பெற்றோரின் விருப்பத்துடன் திருமணம் செய்ய மணமேடை வரை வந்த ஆனந்த் மணமேடையில் இருந்து எழுந்து சென்றுள்ளார். ஆணோ பெண்ணோ திருமணம் பிடிக்காவிட்டால் ஆரம்பத்திலேயே சொல்லிவிட வேண்டும், தாலி கட்டும் நொடியில் மணமேடையை விட்டு எழுந்து செல்வது கொடுமையான விடயமாகும்.!