மீண்டும் அனிதாவிடம் வாங்கி கட்டிக் கொண்ட ஆரி ரசிகர்கள்.! இது தேவையா என விமர்சிக்கும் நெட்டிஷன்கள்..!!
ஆரி ரசிகர்களின் செயலை அனிதா சம்பத் மீண்டும் கண்டித்துள்ளது வைரலாகி வருகிறது. ஆரி ரசிகர்கள் சிலரை பொறுத்த வரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்தவை அனைத்தும் நிஜம் என்றும், அது தான் வாழ்க்கை என்றும் நினைத்து வருகின்றனர். ஆனால் போட்டியாளர்களின் பேச்சை வைத்து பார்த்தால் அது முற்று முழுவதும் ஸ்கிரிப்ட் நிகழ்ச்சி என்பது போல் இருக்கும், இதனை அனிதா, நிஷா, சுரேஷ், வேல்முருகன் ஆகியோர் பல இடங்களில் சாடை பேசினார்கள்.
ஆனால் மக்கள் அதனை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. இன்றளவும் போட்டியாளர்களை திட்டி தீர்த்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் ஓரளவு ஆரியுடன் ஒட்டி இருந்ததால் சனம் மற்றும் அனிதா மக்களின் திட்டுகளில் இருந்து தப்பிக் கொண்டனர். அண்மையில் பிக் பாஸ் வெற்றிக் கொண்டாட்ட சூட் நடந்தது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதன் போது சம்யுக்தா, நிஷா, அர்ச்சனா, கேபிரியலா,ரம்யா, ஷிவானி ஆகியோர், புகைப்படம் எடுத்துக் கொண்டனர் இவர்களுடன் அனிதாவும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படத்தை அனிதா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இதனை பார்த்த ஆரி ரசிகர் ஒருவர் இந்த கூட்டத்துடன் சேராதீர்கள், இவர்கள் மிக மோசமானவர்கள்.
வழமை போல் ஆரி அண்ணாவுடன் மட்டும் இருங்கள் என கொமெண்ட் செய்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள அனிதா பிக் பாஸ் ஹேம் சோ, எங்களுக்கு கொடுத்த விளையாட்டை நாங்கள் விளையாடி முடித்துவிட்டோம். நல்லவர் கெட்டவர் யாரும் இல்லை, எல்லோரும் ஒரே மாதிரியானவர்களே, எனக்கு எல்லோரும் முக்கியமானர்களே என தெரிவித்துள்ளார். இதனை பார்த்த மற்றைய போட்டியாளர்களின் ரசிகர்கள் இது போதுமா இன்னும் வேண்டுமா என கேட்டு வருகின்றனர்.!!