அனிதா சம்பத் வீட்டிற்கு திடீரென சென்ற ஆரி.! காரணம் இது தானாம் வைரலாகும் புகைப்படம்..!!
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ரசிகர்களால் கொண்டாடப் பட்டவர் ஆரி. வீட்டிற்குள் இருந்த அத்தனை போட்டியாளர்களும் ஆரியை வெறுத்த நிலையில் ரசிகர்கள் கொண்டாடினார்கள், இதனால் பைனல் வரை வந்து டைட்டில் வெற்றிபெற்றார். பிக் பாஸ் வீட்டில் சண்டை போட்டாலும் ஓரளவு ஆரியுடன் இருந்தவர்கள் என்றால் அது சனம் ஷெட்டியும் அனிதாவும் தான்.
ஒரு சில பிரச்சனைகளால் கருத்து வெறுபாடு ஏற்பட்டாலும் இறுதியில் இணைந்துகொண்டனர். வெளியே வந்த ஆரி தனது திரைப்பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் நிலையில் திடீரென அனிதா சம்பத் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அனிதா சம்பத்தின் தந்தை அண்மையில் இறந்து விட்டார், அவர்களின் குடும்பத்தினரிடம் சோகத்தை பகிர்ந்துகொள்ள ஆரி சென்றதாக கூறப்படுகின்றது. அனிதா சம்பத்தின் தாயுடன் பேசியதுடன் அவர்களுக்கு ஆறுதலும் கூறியுள்ளார் ஆரி, அத்துடன் அனிதாவின் கணவர் பிரபா, மற்றும் சகோதரனுடன் பேசிவிட்டுச் சென்றுள்ளார்.
அனிதா வீட்டிற்கு சென்ற போது அனிதாவின் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ஆரி அதனை தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார், இதனை தொடர்ந்து ஆரியின் நல்ல குணத்தை மக்கள் பாராட்டி வருகின்றனர்.!!
Family time with aari! Thanks for the visit aari.. Hope this bro bond continues forever! #AariArjunan #aari #anitha pic.twitter.com/FIum9LewBn
— Anitha sampath_Official (@OfficialAnitha) February 10, 2021