எதிர்கால ரேப்பிஷ்ட் இந்த இளைஞர், பெண்களே உங்கள் கற்பை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.! பிக் பாஸ் போட்டியாளர் போட்ட எச்சரிக்கை பதிவு.!!
பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு அழு மூஞ்சியாக இருந்தாலும் எதையும் வெளிப்படையாக பேசியவர் செய்தி வாசிப்பாளர் அனிதா. ஆரியுடன் ஏற்பட்ட முரண்பாட்டினால் வீட்டை விட்டு ரசிகர்களால் வெளியேற்றப் பட்டார். அனிதா வெளியே வந்த போது அவரது தந்தையும் இறந்ததால் சோகத்தில் இருந்தார். பின்னர் அதில் இருந்து மீள்வதற்காக சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் பேச ஆரம்பித்தார்.
அதன் போது சிலர் ஆபாசமாக பேச அதனை ஸ்கிரீன் சாட் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் போட்டதுடன் அவர்களிடம் பாதுகாப்பாக இருக்கும் படி கூறி வந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் அனிதா இளைஞர் ஒருவரின் புகைப்படத்தை பதிவிட்டதுடன் எதிகால ரேப்பிஸ்ட் இந்த இளைஞன்.
இவரிடம் கவனமாக இருங்கள் என தெரிவித்ததுடன், இந்த மெசேஜ்யை அப்படியே உன் அம்மாவிற்கு காட்டு, உன்னை பெற்றதை இட்டு அவர் மிகவும் மகிழ்வார் என தெரிவித்துள்ளார். அதாவது அந்த அளவு அனிதாவிற்கு ஆபாச மெசேஜை குறித்த இளைஞர் அனுப்பி இருக்கிறார். கடந்த சில நாட்களாக ஆபாச மெசேஜ்கள் அனிதாவிற்கு அதிகரித்து வருகிறது,
இதற்கான காரணம் பிரபல தொலைகாட்சியில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு படுக்கையை பகிர வேண்டும் எனவும் நபர் ஒருவர் அனிதாவின் தோழிக்கு அனுப்பிய மெசேஜ்களை அனிதா பதிவிட்டது தான். இதனை அனிதா செய்ததில் இருந்து பலர் அனிதாவிற்கு தேவை இல்லாத மெசேஜ் & கால் செய்வதாக கூறியுள்ளார். !!