இறை வழிபாட்டின் போது தேங்காய் மற்றும் வாழைப்பழம் முதலிடம் பிடிப்பது ஏன்.? இது வரை யாரும் அறியாத வியக்க வைக்கும் காரணம்..! அதிகம் பகிருங்கள்..!!
ஆன்மீக தகவல் பகுதியில் இன்று மிக முக்கியமான இதுவரை பலரும் அறியாத விடயத்தை பார்க்கப் போகிறோம். பொதுவாக இறை வழிபாட்டிற்கு இரண்டு பொருட்கள் முக்கியமானதாகிறது. அவை தேங்காய் மற்றும் வாழைப்பழம். இவை இரண்டும் இல்லாமல் எந்த ஒரு இறை வழிபாடும் இடம்பெறுவதில்லை. மற்றைய பழங்கள் ,பொருட்களை எமது ஆசைக்காக வைத்தாலும் அனைத்து பூஜையிலும் முக்கிய இடம் வாழைப்பழம் மற்றும் தேங்காய்க்கு தான். இவை ஏன் ? இதற்கான காரணம் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.!
வாழைப்பழம்: இதற்கு முற்றும் திறந்த கனி அதாவது முனிவர் போன்ற கனி என ஆன்மீகத்தில் கூறப் படுகின்றது. மற்றைய பழங்களை நாம் உண்டுவிட்டு. அதன் விதைகளை போட்டால் அவை முளைத்து மரமாகிறது, அதே போல் எச்சில் படுத்திவிட்டு கூட எம்மால் சில பழங்களை பூஜையில் வைக்க முடியும். ஆனால் வாழைப்பழத்தை உரித்து உண்டுவிட்டு வைக்க முடியாது,
அத்துடன் வாழைப்பழத்தின் விதையில் இருந்து மரம் வரப் போவதில்லை, இது இறைவனிடம் செல்லும் போது ஆசைகள் இல்லா முனிவர்களை போல் இறைவன் அடி சென்ற பின் முக்தி பெறுகிறது என்று கூறப் படுகிறது. வாழைப்பழங்களுக்கு மறு பிறப்பு கிடையாது. அதே போல் தான் தேங்காய்.
உடைக்கப் பட்ட பின் இதனை வளர வைக்க முடியாது. தேங்காயும் இறைவன் அடி சென்றதும் முக்தி பெறுகிறது. இதனால் இதான் இவற்றை பூஜையின் பிரதான பொருட்களாக போற்றப் படுகிறது. வாழைப்பழத்தில் இருந்து எப்படி மரம் வருவதில்லையோ அதே போல் உடைத்த தேங்காயில் இருந்து மரம் வருவதில்லை.
இதனால் தான் இவை இரண்டையும் முன்னோர்கள் படைத்து வந்தனர். இப்போது தான் அனைத்து பழங்களையும் இறைவனுக்கு படைக்கிறோம், நாம் படைக்கும் பழங்களில் காரணம் இல்லை, ஆனால் எமது ஆசைக்காக செய்கிறோம்…! நன்றி இந்த தகவல் பிடித்திருந்தால் பகிருங்கள் ..!!