வீடு புகுந்து பிரபல நடிகர் மற்றும் குடும்பத்தினர் மீது கொலை வெறி தாக்குதல்..! நடிகர் வைத்தியசாலையில் அனுமதி..!!
சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் ஒருவரை அடியாக்கள் வைத்து தாக்கிய சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் சின்னத்திரை மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் அன்ஷ் பாக்ரி அதனை தொடர்ந்து சினிமாவிலும் பிரகாசித்து வந்தார்.
இந்த நிலையில் திடீரென இவரது வீடுபுகுந்த கும்பல் ஒன்று அன்ஷின் தாய் மற்றும் தங்கையை மிரட்டியதுடன், நடிகர் அன்ஷை மோசமாகி தாக்கியுள்ளது. இதனால் உடல் தலை மற்றும் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டதுடன் இரத்தம் கொட்டிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:.. அன்ஷ் சொந்தமாக வீடு ஒன்றை கட்டி வந்துள்ளார். இந்த வீட்டை கட்டிமுடிக்க கட்டிடக் காரர் ஒருவரிடம் பொறுப்பு கொடுத்துள்ளார். ஆனால் குறித்த நபரே பணத்தை பெறுவதில் குறியாக இருந்ததுடன் வேலை செய்யாமல் இழுபறியாக வைத்துள்ளார்.
இதனால் வேலையை முடிப்பதற்காக வேறு ஒருவருக்கு பொறுப்பு கொடுத்துள்ளார், குறித்த நபர் வேலையை முடித்து கொடுத்த நிலையில் புதியவீட்டிற்கு அன்ஷ் குடிபுகுந்துள்ளார். இந்த நிலையில் முதல் பொறுப்பு கொடுத்த கட்டிட பொறியியலாளர் தனது அடியாக்களுடன் வீடு புகுந்ததுடன், அன்ஷ் தாக்கி பொருட்களுக்கும் சேதம் விளைவித்துள்ளார்..!!