காதலுக்காக திருமணம் முடித்து சில வருடங்களில் கணவரை பிரிந்த நடிகை அனுஹாசன்.!! 10 வருடத்தின் பின் மனம் திறந்து கூறிய உண்மைகள்..!!
கமலஹாசனின் அண்ணன் மகள், நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளினி என ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப் பட்டவர் அனு ஹாசன். இந்திரா திரைப்படத்தில் இவரது நடிப்பை பாராட்டாதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லாம். சில திரைப்படங்களில் நடித்த அனு ஹாசன் விகாஸ் என்ற நபரை உருகி உருகி காதலித்தார். இருவரும் திருமணமும் செய்துகொண்டனர்.
ஆனால் திருமணம் வரை இருந்த காதல் திருமணத்தின் பின் குறைந்து விட்டதாக நினைத்தனர். இதனால் இருவரும் விவாகரத்து பெற்று 10 வருடங்களை கடந்து விட்டது. காதல் திருமண முறிவு பற்றி பேசியுள்ள அனுஹாசன். நானும் விகாஸும் காதலித்தது போல் உலகில் யாரும் காதலிக்கவில்லை என்று எண்ணினோம். ஆனால் திருமணத்தின் பின் அந்த காதல் குறைந்து போனது.
அடிக்கடி சின்ன சின்ன சண்டைகள் வந்தது. கருத்து வேறுபாடு வந்தது. வாழ வேண்டும் என்று தான் நினைத்தேன் ஆனால் காதல் குறைந்தால் எப்படி வாழ்வது, பெரிய சண்டைகள் இல்லை ஆனால் எப்படி வாழ்வது என்று தோன்றியது. காதலில் வாழ்ந்த எமக்கு பிரிவது சரி என்று பட்டது. இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டோம். மகிழ்ச்சியாக தான் இருக்கிறோம்.
என் முதல் கணவர் விகாஸ் மிகவும் நல்லவர் ஆனால் திருமணத்தின் பின் காதல் குறைந்தால் சமாளித்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர், ஆனால் எனக்கு உருகி உருகி காதலிக்க வேண்டும். காதல் தான் வாழ்க்கையாக இருக்க வேண்டும். உடல் சுகம் மட்டும் தான் திருமணம் என்றால் அப்படியான திருமணம் தேவையா என்ன.?
காதல் தான் திருமணத்தின் பின்பும் வேண்டும். இதனால் தான் பிரிந்தேன். 10 வருடங்களாக பிரிவின் காரணத்தை வெளியே சொல்லவில்லை, ஏனெனில் இது மற்றவர்களுக்கு கேலி கிண்டலாக இருக்கும், எமக்கு தான் வலி தெரியும் என கூறியுள்ளார்.!!/