உயிருக்கு போராடும் இன்னுமொரு இளம் பெண்… ! தமிழ் நாட்டை ஆட்டி படைக்கும் அரசியல் வாதிகள்…!!
செப்டம்பர் மாதம் அதிமுகவின் பேனர் விழுந்து 23 வயதான அப்பாவி பெண் சுபாஸ்ரீ இறந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைத்தது..இதனை தொடர்ந்து பேனர்கள் மக்கள் நடமாடும் இடங்களில் வைக்க வேண்டாம் என்ற கோரிக்கையை சினிமா பிரபலங்கள் உட்பட அனைவரும் வைத்தனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் அதிமுகவினரின் குடும்ப விழாவிற்காக வைக்கப் பட்ட கொடி கம்பம் சரிந்து விழுந்ததில் 30 வயது பெண் ஒருவர் தனது இரண்டு கால்களையும் இழந்து உயிருக்கு போராடி வருகின்றார். கோயம்புத்தூர் அவினாசி சாலையில் அனுராதா என்ற குறித்த பெண் இரு சக்கர வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த போது முன்னால் அதிமுகவினரின் கொடி கம்பம் விழுந்துள்ளது.
இதில் இருந்து விலகி செல்ல அனுராதா முயன்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அதன் போது பின்னால் வந்த லொறியின் டயர்கள் அனுராதாவின் கால்கள் மீது ஏறிய நிலையில் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அனுராதாவிற்கு 7 மணி நேர அறுவை சிகிச்சை இடம்பெற்றுள்ளது. இருப்பினும் அனுராதாவின் கால்களை மீட்பது கடினம் என தெரிவித்துள்ளனர். கோகுலம் பார்க்கில் பணி புரியும் அனுராதாவின் உழைப்பை நம்பி ஒட்டுமொத்த குடும்பமும் உள்ள நிலையில் உயிருக்கு போராடும் அனுராதாவின் நிலை அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலீஸார் லொறி ட்ரைவரை கைதி செய்துள்ளனர்.
கொடி கம்பம் வைத்தவர்களை கைது செய்ய முடியாது என்றும் காவல் துறையில் அனுமதி எடுத்த பின்னரே கொடி கம்பங்கள் வைக்கப் பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.. இது வழமையான ஒன்றாக மாறிவிட்டது..இன்னும் எத்தனை உயிர்கள் பறிப்போகப் போகிறதோ… அனுராதா மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனை செய்ய மட்டுமே எங்களால் முடிகிறது..!!
Coimbatore woman injured today after she allegedly tried to manoeuvre scooter away from AIADMK flag pole on road. As she was moving away, a lorry on the road rammed into her, according to family. Police have filed FIR against lorry driver.Happened in Singanallur. @thenewsminute pic.twitter.com/jENoXbj2bh
— priyankathirumurthy (@priyankathiru) November 11, 2019