உடலில் இருந்து பிரிந்தெடுக்கப் பட்ட 8 உறுப்புகள்..! ஆயிரம் கணக்கானோரின் உயிர்களை காப்பாற்றிவிட்டு இறந்த பின்பும் வாழும் இளைஞன்..!!
இறந்த பின்பும் வாழும் வரம் அனைவருக்கும் கிடைத்து விடுவதில்லை. அப்படி வரம் கிடைத்தவர்கள் சில காலம் மட்டுமே வாழ்ந்துவிட்டு போய் விடுவின்றனர். கேரளாவில் ஏராளமான உயிர்களை காப்பாற்றி இறந்தும் வாழும் இளைஞன் பற்றிய செய்தி இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று வியக்க வைத்துள்ளது. கேரளாவை சேர்ந்தவர் அனுஜித்.
2010ம் ஆண்டு கேரளா கொட்டக்கரை பகுதியில் ஏற்பட இருந்த மிகப் பெரிய ரெயில் விபத்தில் இருந்து மக்களை காப்பாற்றியவர் இந்த அனுஜித். ரெயில் தண்டவாளத்தில் மிகப் பெரிய விரிசல் இருந்த நிலையில் தூரத்தில் ரெயில் வருவதை கண்ட அனுஜித் தனது உயிரை பற்றி துளியும் சிந்திக்காது உடனடியாக ரெயில் பாதையில் இறங்கியதுடன்,
கையில் இருந்த சிவப்பு பையை உயர்த்தி காட்டியப் படி ரெயில் வரும் பாதையில் ஓடியதை தொடர்ந்து ரெயில் நிறுத்தப்பட்டு விபத்து தடுக்கப் பட்டது. இதனை தொடர்ந்து பலரும் அனுஜித்தை முதலவர் உட்பட பலரும் அனுஜித்தை பாராட்டி இருந்தனர். இந்த நிலையில் அண்மையில் வீதி விபத்தொன்றில் அனுஜித்தின் மூலை செயலிழந்தது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த அனுஜித் மரணிக்கும் நொடியில் அனுஜித்தின் இறுதி ஆசையை நிறைவேற்ற நினைத்த பெற்றோர் அவரது இதயம், விழிப் படலங்கள், சிறு நீரகங்கள், சிறு குடல் உட்பட உடலில் எடுக்க முடிந்த 8 உறுப்புகளை தானம் செய்தனர். அனுஜித்தின் உடல் மட்டுமே அடக்கம் செய்யப் பட்டுள்ள நிலையில் அனுஜித்திற்கு மரணமே இல்லை என கண்ணீர் சிந்துகின்றனர் மக்கள்..?!