பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணவருக்கு ஆதரவாக களமிறங்கி உள்ள முன்னாள் மனைவிகளான கல்கி மற்றும் ஆர்த்தி..! சூடு பிடிக்கும் வழக்கு..!!
பிரபல இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் புகார் கூறியுள்ள நிலையில் இந்த புகார் பொய்யானவை என்றும் என்றும் தங்கள் முன்னாள் கணவர் இது போன்ற செயலை செய்ய மாட்டார் என்றும் அனுராக்கின் முன்னாள் மனைவிகளான ஆர்த்தி மற்றும் கல்கி அனுராக்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
அனுராக் காஷ்யப் நடிகை பாயலிடம் பாலியல் சேட்டை செய்ததுடன் அத்துமீறி நடந்துகொண்டதாக கொடுத்த புகார் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது மனைவிமார்களின் ஆதரவானது ஆறுதலாகி உள்ளது.
முன்னாள் மனைவியான ஆர்த்தி தனது சமூக வலைத்தள பதிவில் “அனுராக் காஷ்யப் நீங்கள் எப்போதும் ராக் ஸ்டார் தான், உங்கள் வளர்ச்சியை கண்டு பொறாமையில் செய்யும் இது போன்ற செயலை கண்டுகொள்ளாதீர்கள். உங்கள் மீது இப்படியான புகார் கூறியவர் சரியானவராக இருக்க மாட்டார். நீங்கள் எத்தனை தூய்மையானவர், பெண்களை மதிப்பவர், பெண்களின் சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பவர் என்பது எனக்கு தெரியும் என தெரிவித்துள்ளார்”.!
அதே போல் அவரது இன்னுமொரு மனைவியான கல்கி தனது பதிவில் ” அன்பின் அனுராக், எங்கள் பிரிவின் பின் கூட எனக்கு மரியாதை கொடுக்கும் நீங்கள் தப்பு செய்திருக்கவே மாட்டீர்கள். எங்கள் நிஜ வாழ்க்கை ஹீரோ நீங்கள். பெண்கள் விடயத்தில் நீங்கள் கண்ணியமானவர். இவை அனைத்துமே போலி குற்றச் சாட்டுகள்.
அதனால் கடந்து செல்லுங்கள். என்றும் காதலிடன் முன்னாள் மனைவி என தெரிவித்துள்ளார். தற்போது இவை இணையத்தில் வைரலாகி வருகிறது..!!