சோலார் மின்சாரத் தயாரிப்பில் பல மில்லியன்களை முதலீடு செய்தது ஆப்பிள் நிறுவனம்!
உலகின் அதியுயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனமானது பல்வேறு வகையிலும் தன்னுடைய தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகின்றது. தற்போது ஆப்பிள் நிறுவனம் கிறீன் எனர்ஜி எனப்படும் சோலார் மின்சாரத் தயாரிப்பில் பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.
சூரிய சக்தியே தற்போது கிரீன் எனர்ஜிக்கு முக்கிய காரணியாக கருத்தப்படுகின்றது. சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் சோலார் பேனல்களை அமைத்து மின்சாரம் தயாரிக்க முடியும். இதனால் அதிகளவில் பயனடையவும் முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் சுற்றுசூழலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.
ஆப்பிள் நிறுவனமும் இந்த சூரிய சக்தியைப் பயன்படுத்தத் தயாராகியுள்ளது. இந்தத் தகவல் தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், 1 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது.
சோலார் என்கின்ற இந்த சூரிய சக்தியிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆப்பிள் தன் திட்டத்தை சீனாவில் நிறுவ இருக்கின்றது. இதற்காக ஆப்பிள் நிறுவனம் 300 மில்லியன் டாலர் முதலீடு செய்கின்றது.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”