சிங்கப்பூரில் ஜனவரி மாதம் தொடங்கும் தொடக்கநிலை முதலாம் வகுப்புப் பதிவு நாளை ஆரம்பம்..!!!
2013 ஜனவரி 2ஆம் திகதிக்கும் 2014 ஜனவரி 01ஆம் திகதிக்கும் இடையில் பிறந்த பிள்ளைகள் அனைவரும் அதற்கு தகுதி பெறுகின்றனர். மேலும் ஜனவரியில் தொடங்கும் தொடக்கநிலை முதலாம் வகுப்புக்கான சேர்க்கைப் பதிவு நாளை ஆரம்பமாகும்.
180க்கும் அதிகமான தொடக்கப் பள்ளிகளில் திங்கட்கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை வரை பதிவு மேற்கொள்ளப்படும். மேலும் காலை 8 மணிமுதல் 11 மணிவரையிலும் பிற்பகல் 2.30 மணியிலிருந்து மாலை 4.30 மணிவரையிலும் பெற்றோர் பதிந்துகொள்ளலாம்.
தொடக்கப்பள்ளிகளில் தற்போது பயின்றுவரும் மாணவர்களின் சகோதர, சகோதரிகளுக்கான முதற்கட்டப் பதிவு 2 நாள்கள் நீடிக்கும். அடுத்தடுத்த பதிவுகள் இம்மாதம் 9ஆம் திகதியில் இருந்து அக்டோபர் 31ஆம் திகதி வரை நடைபெறும்.