44 பேரை அசல்டாக ஏமாற்றியது எப்படி..? சென்னை பெண் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்.. !
சென்னையில் 44 பேரிடம் 25 லட்சத்திற்கு மேல் மோசடி செய்த இளம் பெண் ஒருவரை பொலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை ஆயிரம் விளக்கு,நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை அஜிஸ்முல்க் வீதியில் 5 மாதங்களுக்கு முன்பு இ – ஜாப்ஸ் என்ற நிறுவனம் புதிதாக ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இந்த நிறுவனம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் எனவும் சிங்கப்பூர் மலேசியா, போன்ற நாடுகளுக்கு குறைந்த செலவில் விரைவாக வேலை வாங்கிக் கொடுப்பப் படும் என கூறப் பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் ஹெச் ஆராக பணி புரிந்தவர் தான் அருணா ஹன்சிகா.இவரது வேலையானது குறித்த நிறுவனத்திற்கு வேலை வாய்ப்புக்காக வருபவர்களிடம் நிறுவனத்தின் விதிமுறைகள் கூறுவது மற்றும் பணம் வசூலிப்பது தான். இங்கு வேலை வாய்ப்பு கேட்டு வருபவர்களிடம் பாஸ்போர்ட் மற்றும் அவர்களது விபரங்கள் சேகரிப்பது, அத்துடன் நேர்முக தேர்வு நடத்துவது போன்றவையாகும்.
இவை முடிந்தபின் விசாவிற்காக 30 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் வசூல் செய்த இவர்கள் எந்த நாட்டிற்கு செல்லப் போகிறார்கள் என்ன வேலை என்பதை நம்பக தன்மையுடைய உறுதி கடிதமொன்றையும் கொடுத்து விடுவார்கள். இப்படி ஏராளமானவர்கள் பலர் பணம் கட்டிய நிலையில் வெளிநாட்டுக்கு செல்ல காத்திருந்துள்ளனர்.
ஆனால் திடீரென ஆகஸ்ட் 31ம் திகதி இ – ஜாப்ஸ் நிறுவனம் மூடப் பட்டதாக தகவல் வெளியானதை தொடர்ந்து பணம் கொடுத்த நபர்கள் அதிர்ந்துள்ளனர். இதனை தொடர்ந்து நிறுவனத்திடம் பணம் கொடுத்து ஏமாந்துபோன 44 பேர் ஆயிரம் விளக்கு குற்றப்பிரிவில் கொடுத்த புகாருக்கமைய உதவிக் கமிஷனர் முத்துவேல் பாண்டி, மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணைகள் ஆரம்பமானது.
இதன் போது குறித்த நிறுவத்தின் உரிமையாளர் நிருபன் சக்ரவர்த்தி என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அருணா மற்றும் நிருபனை பொலீஸார் தேடி வந்த நிலையில் அருணா பொலீஸாரிடம் சிக்கினார். அவரை கைது செய்து விசாரணை செய்ததில் 44 பேரையும் எப்படி ஏமாற்றினார்கள் என்பதை கூறியுள்ளார்.
ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் வசித்து வரும் நான் பல நிறுவனங்களுக்கு வேலைக்காக அழைந்தும் கிடைக்கவில்லை. ஆனால் இ.ஜாப்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்ததும் கிடைத்தது மாதம் 35 ஆயிரம் ரூபாய் சம்பளம்,ஹெச் ஆர் போஸ்ட். வேறென்ன வேண்டும்.?
எனக்கு கொடுத்த வேலை இண்டெர்வியூ எடுப்பது, அது நம்பும் படியாக இருக்க வேண்டும் என நிருபன் கூறினார். அதனால் கல்வித் தகமை,சான்றிதழ் மட்டும் இன்றி மெடிக்கல் டெஸ்ட் போன்றவற்றை எடுத்தேன். இதனால் அவர்கள் எங்களை நம்பினார் கள். இதன் பின் அனுமதி கடிதம் கொடுப்போம், வேலை வாய்ப்பு வந்தால் கூறுவதாக சொல்வோம்.
ஆனால் எம்மால் அனுப்ப முடியாமல் போனது, பணத்தை கொடுத்தவர்கள் தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர், அதனால் வேறு வழி இன்றி நிறுவனத்தை மூடிவிட்டோம். பணம் என்னிடம் இல்லை கொடுக்கும் வசதியும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து நிருபன் சக்ரவர்த்தியை தேடும் பணியில் பொலீஸார் ஈடுபட்டுள்ளனர்..!