காய்ச்சலுக்கு போடப்பட்ட ஒரே ஒரு ஊசியால் சில நிமிடத்தில் துடிதுடித்து இறந்து போன பெண் டாக்டர்.! கொலையா என கதறி துடிக்கும் பெற்றோர்.!!
திருமணமாகி 90 நாட்களில் பெண் டாக்டர் ஒருவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த அஷோக் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஹரிணி என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்தின் பின் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். ஹரிணி மற்றும் அஷோக் மருத்துவ துறையை சார்ந்தவர்கள், மதுரை அரசு மருத்துவமனையில் எம்.எஸ். 3-ம் ஆண்டு படித்து வருகிறார் அஷோக். அதே மருத்துவ மனையில் மயக்கவி யல் துறையில் எம்.டி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் ஹரிணி.
இதனால் இருவருக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு இருந்துள்ளது. இந்த நிலையில் இரண்டு நாட்களாக ஹரிணிக்கு காய்ச்சல் இருந்துள்ளது, இதனால் காய்ச்சலுக்கான ஊசியை வீட்டில் வைத்து போட்டுள்ளார் அஷோக் குமார்.
ஆனால் ஹரிணிக்கு திடீரென உடல் நிலை மோசமடைந்ததால் வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போது உயிரை காப்பாற்றுவது கடினம் என டாக்டர்கள் கை விரித்துள்ளதுடன் முடிந்த அளவு போராடி உள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஹரிணி உயிர் இழந்துள்ளார்.
டாக்டர் பெண் ஒருவர், உடல் ஆரோக்கியமானவர், அதனால் சாதாரண ஊசியால் இறந்து போக வாய்ப்பில்லை என உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது..இது கொலையா, அல்லது இயற்கை மரணமா என்பது மருத்துவ பரிசோதனையின் பின் வெளி வரும் என தெரிவித்துள்ளனர்.!