“கொரோனா வைரஸில் இருந்து இரண்டாவது முறையாக இம்முறையும் தப்பிவிட்டேன்” குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் வெளியிட்ட பதிவு.!!
கொரோனா வைரஸில் இருந்து இரண்டாவது முறையாகவும் தப்பிவிட்டதாக குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் போட்ட பதிவு வைரலாகி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ரசிகர்களுக்கு பிடித்த போட்டியாளராக இருந்தவர் அஸ்வின்.
அவரது சிரிப்பு, பேச்சு என அனைத்திற்கும் ரசிகைகள் இருந்தனர். நிகழ்ச்சியில் நன்றாக சமைக்கக் கூடியவர்களில் அஸ்வினும் ஒருவர் அதனால் மூன்றாம் இடம் பெற்றார். தற்போது அஸ்வினுக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்துள்ளது. இந்த நிலையில் அஸ்வின் வெளியிட்ட இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அஸ்வின் கடந்த மாதம் காய்ச்சல் சளி ஏற்பட்டது, பயந்து போய் உடனடியாக PCR பரிசோதனை செய்தேன் நெகடிவ் என ரிஸல்ட் வந்தது அதனால் நிம்மதியானேன். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் இந்த நிலையில்
மறுபடி காய்ச்சல், உடல் வலி வந்தது, இம்முறை கொரோனா வைரஸ் இருக்கும் என்று பயந்து போனேன் அதனால் மறுபடியும் சென்று பரிசோதனை செய்துகொண்டேன் இம்முறையும் தப்பிவிட்டேன், கடவுளுக்கு தான் நன்றி சொல்வேன், முடிந்த அளவு எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார்!!